Related archaeological discoveries
PART-A Unit-VI: History, Culture, Heritage, and Socio-Political Movements in Tamil Nadu
இந்த தலைப்பின் முந்தைய ஆண்டு வினாக்கள் (PYQ)
TNPSC தேர்வுகளில் இந்த தலைப்பிலிருந்து கேட்கப்பட்ட வினாக்கள் — PDF ஆக பதிவிறக்கவும். · PDF 8.5 MB
1. முக்கிய தொல்லியல் அகழாய்வு இடங்கள்
அரிக்கமேடு புதுச்சேரிக்கு அருகில் அமைந்துள்ள சங்ககாலத் துறைமுகம் ஆகும். இங்கு
மோர்டிமர் வீலர் அறிவியல் அடிப்படையிலான மண் அடுக்கு முறையில் அகழாய்வு செய்தார்.
இங்கு திட்டமிட்ட நகரம், கிடங்கு, வளைய கிணறுகள், ரோம தொழிற்சாலை போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன.
மேலும் ஆகஸ்டஸ் காலத்து ரோம தங்க நாணயங்கள், ரோம பானைகள், சங்ககால சோழ நாணயங்கள் கிடைத்துள்ளன.
இவை தமிழ்நாடு – ரோமானிய கடல்வழி வர்த்தகத்தை உறுதிப்படுத்துகின்றன.
கீழடி சிவகங்கை மாவட்டத்தில் வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது; இது பிப்ரவரி 2017ல் கண்டறியப்பட்டது.
இங்கு தமிழ்-பிராமி எழுத்துக்கள் கொண்ட பானை ஓடுகள் மற்றும் Stone Alignment Burial கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் கி.மு. 6ஆம் நூற்றாண்டிலேயே தமிழ்நாட்டில் நகரமயமாக்கல் மற்றும் கல்வியறிவு இருந்தது என நிரூபிக்கப்படுகிறது.
ஆதிச்சநல்லூர் தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள
114 ஏக்கர் பரப்பளவுள்ள மிகப் பெரிய தாழி அடக்கத் தளம் ஆகும்.
இதனை முதலில் ஆண்ட்ரூ ஜேகர் அகழாய்வு செய்தார். இங்கு கிடைத்த தொல்பொருட்கள்
பெர்லின் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளன.
பையம்பள்ளி ஒரு புதிய கற்காலப் பண்பாட்டு தளம்.
தமிழ்நாட்டில் அதிகமான பளபளப்பான கற்கருவிகள் (Polished Stone Celts) இங்கு கிடைத்துள்ளன.
கொடுமணல் மற்றும் குட்டூர்
இலவச முன்னோட்டம் இங்கே முடிகிறது